அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கனிஸ்ட இடைநிலை ஆய்வுகூட கட்டடத்தொகுதி 2026ம் ஆண்டு ஆவணி மாதம் 4ம் திகதி மாணவர்களின் பாவனைக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ உபாலி சமரசிங்கே [கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்] அவர்களும், கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் [பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம்] அவர்களும், கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் [பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம்] அவர்களும், திரு. M. பற்றிக்நிரஞ்சன் [செயலாளர் – கல்வி அமைச்சு, வடமாகாணம்] அவர்களும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் அவர்களும், திரு.V. ஜெகானந்தன் (Director of school works – வடமாகாணம்) அவர்களும், திரு. க. முகுந்தன் [வலயக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு வலயம்] அவர்களும், திருமதி. T.பிரியந்தி [வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி திட்டமிடல்] அவர்களும், திருT.மதியழகன் [வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி] அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

